வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (08:15 IST)

பிரிட்ஜை திறந்த 5 வயது சிறுமி உயிரிழந்த பரிதாபம்.. சென்னையில் சோக சம்பவம்!

Fridge
சென்னையில் ஐந்து வயது சிறுமி பிரிட்ஜை திறந்தபோது ஷாக் அடித்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பிரிட்ஜில் தின்பண்டம் எடுப்பதற்காக திறந்ததாகவும் அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த சிறுமி மீது மின்சாரம் பாய்ந்ததாகவும் தெரிகிறது.

இதனை எடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து சிறுமி இறந்து விட்டதாக கூறியதை அடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரூபாவதி என்ற 5 வயது சிறுமி பிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் பிரிட்ஜின் கைப்பிடியில் மின்சாரம் பாய்ந்ததால் தான் சிறுமி இறந்ததாக கூறப்படுகிறது.  இது குறித்து எலக்ட்ரிசியன்கள் கூறியபோது ஃப்ரிட்ஜை அவ்வப்போது சர்வீஸ் பார்க்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால்  இது மாதிரியான சோக நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Edited by Siva