1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (15:22 IST)

தமிழகத்தில் திறமையற்ற பொம்மை அரசு: ஆளுனரை சந்தித்த பின் ஈபிஎஸ் பேட்டி

Edappadi
தமிழகத்தில் திறமையற்ற பொம்மை அரசு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு, ‘ திமுக அரசு மீது குற்றச்சாட்டு கூறு மனு அளித்துள்ளதாக தெரிகிறது
 
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘ திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றும் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran