1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (07:33 IST)

குடிபோதையில் மூன்று குழந்தைகளை கொலை செய்த தந்தை

குடிபோதையில் மூன்று குழந்தைகளை கொலை செய்த தந்தை

நெல்லை தருவை பகுதியை சேர்ந்த ராஜசேகருக்கு மேனகா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.


 


இந்நிலையில், ராஜசேகரின் குடிப்பழக்கத்தால், அவரது மனைவியுடன் அடிக்கடி சண்டை வரும் என கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்ததால், கணவரிடம் கோபித்து கொண்டு மனைவி மேனகா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராஜசேகர், மனைவி வீட்டில் இல்லாததால், தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார்.

அப்போதும் மூத்த பெண் விஷம் குடிக்க மறுத்துள்ளார், அதனால், ராஜசேகர், அப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். குடி போதை தெளிந்த பிறகுதான், அவர் செய்த தவறை உணர்ந்துள்ளார். பின்னர், துக்கம் தாங்காமல் தற்கொலை செய்ய முடிவு செய்த ராஜசேகர், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.