1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 16 ஜூன் 2016 (12:12 IST)

ஸ்கேன் செய்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்

மருத்துவ பரிசோதனை மையத்தில் ஸ்கேன் செய்ய வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 

 
நேற்று புதன்கிழமை காலை கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், அரசு மருத்துவமனை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஸ்கேன் பரிசோதனைக்காக சென்றுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தயானந்தன் என்ற மருத்துவரிடம் வந்துள்ளார்.
 
தயானந்தன், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் ஸ்கேன் மையம் நடத்தி வருகிறார். இவரது ஸ்கேன் மையத்துக்கு அந்த கர்ப்பிணி பெண் குழந்தையின் வளர்ச்சி குறித்து தெரிந்துகொள்ள வந்துள்ளார்.
 
அப்பெண்ணுக்கு ஸ்கேன் எடுக்கும்போது, மருத்துவர் தயானந்தன் அப்பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணையின் முடிவில் மருத்துவர் தயானந்தனை கைது செய்தனர்.