மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக-தமாகா வரும்: வைகோ நம்பிக்கை
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக-தமாகா வரும்: வைகோ நம்பிக்கை
தேமுதிக, தமாக ஆகிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணிக்கு நிச்சயம் வரும் என வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி மக்கள் நலக்கூட்டணிதான். இந்த கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எங்களது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மக்கள் நலக் கூட்டணியின் இரண்டாம் கட்டப் பிரசாரம் முடிந்த பிறகு தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்படும். அதே போல, முதல்வர் வேட்பாளர் குறித்து எங்கள் கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஆலோசித்து முடிவு செய்வோம் என்றார்.