தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவையொட்டி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகலில் இருந்து சோர்வாக காணப்பட்ட தயாளு அம்மாளை இன்று மாலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.