1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:21 IST)

பருப்பு விலை உயர்வை தடுக்க வேண்டும்: என்.ஆர்.தனபாலன்

மத்திய–மாநில அரசுகள் பருப்பு விலை உயர்வை தடுக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
பருப்பு வகைகளின் போதிய விளைச்சல் இல்லாத காரணமும் குறைந்த அளவு விளைந்த துவரம் பருப்புகளை பெரிய வணிக நிறுவனங்கள் பதுக்கி வைத்திருப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
 
மேலும் ஆன்–லைன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் பெரிய அளவில் துவரம் பருப்புகளை பதுக்கி வைத்திருப்பதாலும் விலை ஏற்றத்திற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
 
எனவே விலை ஏற்றத்தை மத்திய-மாநில அரசுகள் தடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தனபாலன் கூறியுள்ளார்.