டெங்கு காய்ச்சல்: திருச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
டெங்கு காய்சல் பாதிப்பால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து 12ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் ரிஸ்வானா பேகம் என்ற பெண் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
12ஆம் வகுப்பு படித்து வந்த அவருக்கு மருத்துவர்கள் நடத்திய சோதனையில், அந்த மாணவிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்த அவதுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார் மாணவி.