1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஜூலை 2023 (16:59 IST)

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு முன்ஜாமின்: உயர் நீதிமன்றம் உத்தரவு..!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தாக்கப்பட்டதாக செய்தி பதிவிட்ட வழக்கில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பியதாக சிதம்பரம் போலீசார், சூர்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவோம் என்ற நிலையில் எஸ்.ஜி.சூர்யா முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
 
இந்த நிலையில் எஸ்.ஜி.சூர்யாவுக்கு முன்ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை, காலை மற்றும் மாலை சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளது.
 
Edited by Siva