வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj

7 ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் 85 பேருக்கு கொரோனா உறுதி !

சென்னை கிண்டியில் உள்ள பிரபல 7 ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் 85 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கல் உயிரிழந்துள்ளனர்.

தமிழகதில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ஓரளவு கொரோனா தொற்று குறைவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட அலைப்பரவல் கொரோனா உருமாற்றம் பெற்றுப் பலநாடுகளுக்குப் பரவிவருகிறது. இது பிரிட்டனிலிருந்து வந்தவர்களால் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது, இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் முக்கியமான ஹோட்டலும் சென்னையில் அடையாளமாக உள்ள 7 ஸ்டார் ஹோட்டலான ITC- ஊழியர்கள் உள்ளிட்ட மொத்தம் 85 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனா இந்த ஹோட்டலில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியிகள் மற்றும் விழாக்கள் அனைத்தும் தடை செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் இங்குள்ளோருகு தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.