1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Conservancy Workers in Chennai Protest, Arrested

சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டம்.,. மீண்டும் கைது..!

தூய்மைப் பணியாளர்கள்
தங்கள் பணிகளை நிரந்தரம் செய்யக் கோரி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு தரப்பில் இருந்து எந்தவிதமான உறுதியான பதிலும் அளிக்கப்படாததால், அவர்கள் இன்று மே தின பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
 
இந்த கைது நடவடிக்கை, தூய்மை பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசு இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிக்கையையும் வெளியிடவில்லை.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்தியாவால் தேசிய அவசரநிலை.. அதனாலதான் வரி போட்டோம்! - நீதிமன்றத்தில் மன்றாடும் ட்ரம்ப்!