1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (18:23 IST)

மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: தற்கொலையா என விசாரணை

Chennai Train
மின்சார ரயில் முன் பாய்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த நிரோஷா என்ற 20 வயது கல்லூரி மாணவி தினமும் தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு மின்சார ரயில் மூலம் செல்வது வழக்கம்
 
இந்த நிலையில் இன்று சிங்கப்பெருமாள் ரயில் நிலையத்திற்கு வந்த நிரோஷா திடீரென கடற்கரை நோக்கி சென்ற மின்சார விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நிரோஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். நிரோஷாவின் பையில் கடிதம் இருந்ததாக கூறப்படுகிறது