1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J. Durai
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (12:53 IST)

சரிந்த குளத்தின் கரை நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைப்பு!

கனமழையால் சரிந்த குளத்தின் கரை நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.


நாகை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுகுதிகளை கூடுதல் தலைமைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரமேஷ் சந்த் மீனா, ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி,மீனம்ப நல்லூர், தலைஞாயிறு என 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்‌. அதன் ஒரு பகுதியாக  திருக்குவளை -எட்டுக்குடி பிரதான சாலையில் தொடர் கனமழை  காரணமாக பிள்ளையார் கோயில் குளம் மண் சரிவு ஏற்பட்டது.

நிலையில் உடனடியாக பேரிடர் கால  பராமரிப்பு பணி  நெடுஞ்சாலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.அதாவது குளத்தின் கரையை மண் மூட்டை கொண்டு அடுக்கி பலப்படுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை கூடுதல் தலைமைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரமேஷ் சந்த் மீனா, ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ், கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி,வட்டாட்சியர் சுதர்சன், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் எம்.நாகராஜன்,உதவி பொறியாளர் அ‌.உமாமகேஸ்வரி, சாலை ஆய்வாளர் ஜி.ரமேஷ்குமார் சாலை பணியாளர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.