1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:25 IST)

கேரள சிறுமிகளுக்கு ஆபாச மிரட்டல்! – சென்னை இளைஞர் கைது!

கேரள சிறுமிகளோடு இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாச மிரட்டல் விடுத்த சென்னை இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதில் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளது. சென்னையை சேர்ந்த மார்க் டி குரூஸ் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமாக கேரளாவை சேர்ந்த இரண்டு சிறுமிகளோடு பழகி வந்துள்ளார்.
ஆறு வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம்

பின்னர் அவர்களிடம் போட்டோவை கேட்டு பெற்று அதை ஆபாசமாக மார்பிங் எடிட் செய்து அதை அவர்களுக்கே அனுப்பி ஆபாச மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கேரள சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் புகார் மனுவை தமிழக போலீஸுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உடனடியாக அந்த புகார் மேல் நடவடிக்கை எடுத்த பரங்கிமலை அனைத்து மகளிர் போலீஸார் மாங்காளி அம்மன் கோவிலை சேர்ந்த மார்க் டி குரூஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 19 வயதான மார்க் டி குரீஸ் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.