1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஜூன் 2023 (16:20 IST)

கடமை தவறியுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

highcourt
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கடமை தவறியுள்ளார் என சென்னை நீதிமன்றம் அதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 
காவல் ஆய்வாளராக பணிபுரிந்த ரஞ்சித் என்பவர் கலைஞர் 2019 ஆம் ஆண்டு தனக்கு இரண்டு மாதம் ஊதியம் தரவில்லை என்று வழக்கு பதிவு செய்தார். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சம்பள பாக்கி கோரிய காவல் ஆய்வாளரின் விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் டிஜிபி கடமை தவறியுள்ளார் என்றும் கடமை தவறிய டிஜிபி-யின் செயல் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
 
நாட்டில் அதிகாரிகளின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதற்கு இந்த வழக்கு மிகச்சிறந்த உதாரணம் என்றும் சம்பள நிலுவை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு டிஜிபி முதல் சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ஷ்ட தெரிவித்துள்ளது. 
 
ஒரு வாரத்தில் மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசை அளித்து உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva