1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (08:42 IST)

கூல் ட்ரிங்க்ஸ் குடித்த சிறுமி உயிரிழப்பு! – சென்னை குளிர்பான ஆலை மூடல்!

சென்னையில் சோழவரம் அருகே குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழந்த நிலையில் குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னை சோழவரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தாகத்திற்காக அருகில் உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தியுள்ளார். பானம் அருந்திய சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தனியார் குளிர்பான ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், சிறுமி குடித்த குளிர்பானத்தின் பேட்ஜ் எண் கொண்ட பெட்டிகளை அனைத்து கடைகளில் இருந்தும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.