வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2016 (11:43 IST)

கடும் மழை : சென்னை விமான நிலையம் மூடப்பட்டது

கடுமையான மழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.


 

 
வர்தா புயல் காரணமாக, கனத்த மழை மற்றும் புயல் காற்று வீசி வருதால், சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
கனமழை காரணமாக விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏராளமான விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 
 
இதனால் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல வந்த பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.