வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 மார்ச் 2023 (16:26 IST)

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை திருப்தியாக இல்லை: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

corona
தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்களில் கொரோனோ பரிசோதனை எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் மதிய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 
 
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்  தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரா குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாகவும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒப்பிட்டு அழைப்பில் திருப்திகரமாக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran