1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 10 மார்ச் 2016 (15:22 IST)

மனைவி, குழந்தைளை கொலை செய்து தொழிலதிபர் தற்கொலை: சென்னையில் பயங்கரம்

தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு, ஒரு தொழிலதிபர் தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை கொத்தவால்சவடி பகுதியில் வசித்து வருபர் தேவேந்திர குமார்(48), அவரின் மனைவி தீஷியா(38), மகள் ஷெரிபி(15), மகன் மானஷ்(12) அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர். அவர்களுடன் தேவேந்திர குமாரின்  தாய் ஷோபா தேவியும் வசித்து வந்தார்.
 
நேற்று இரவு அவர்கள் அனைவரும் சினிமாவுக்கு சென்றுள்ளார்கள். அதன்பின் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அதன்பின் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர்.
 
அப்போது கையில் கைத்தியுடன் அவர்கள் உறங்கும் அறைக்குள் நுழைந்த தேவேந்திர குமார், தன்னுடய மகள் மற்றும் மகனின் கழுத்தை அறுத்து  கொலை செய்தார். இதைக் கண்டு அலறிய அவரின் தாயையும் கீழே தள்ளிவிட்டார்.
 
அதன்பின் தன்னுடைய மனைவியின் கழுத்தையும் அறுத்துக் கொன்று விட்டு, தன்னுடைய கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு கூச்சலிட்ட அவரின் தாயின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் நான்கு பேரும் இறந்து விட்டனர்.
 
தேவேந்திர குமார் எதற்காக இப்படி செய்தார் என்று தெரியவில்லை. அவர் எழுதியுள்ள கடிதத்திலும் இதுபற்றி குறிப்பிடவில்லை. என் குடும்பத்தை  நானே கொலை செய்கிறேன். இதற்கு நானே பொறுப்பு. இதற்கு வேறு யாரும் காரணம் அல்ல என்றும்,  மூன்று செல்போன் எண்களை எழுதி, இவர்களுக்கு செய்தியை கூறிவிடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்