1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (15:54 IST)

11 வயது மகளை தனது காமத்துக்கு இரையாக்கிய கொடூர தந்தை!!

தனது 11 வயது மகளை பாலியல் கொடுமை செய்த 46 வயது தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
திருச்சியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் கடந்த இரண்டு வாரமாக தனது தந்தையால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த தொல்லை தாங்காமல் ஒருகட்டத்தில் அந்த சிறுமி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
 
பின்னர், குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகள் நல மையத்தில் இருந்து வந்த அதிகாரிகள், சிறுமியை மீட்டு மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடு்த்தனர்.
 
கைது செய்யப்பட்ட நபருக்கு அதிகமான குடி பழக்கம் இருந்துள்ளது. தொடர்ந்து குடித்து வந்ததால், இரண்டு வருடங்களுக்கு முன் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
வழக்கு பதிவு செய்து காவல்துறை அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளது.