வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Modified: வெள்ளி, 2 மே 2014 (12:26 IST)

சென்னை ராயப்பேட்டை வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் வணிக வளாகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 
 
வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனடியாக செயலிழக்கச் செய்யப்படும் என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்னர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.