1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:40 IST)

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது - நயினார் நாகேந்திரன் !

தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி கலந்து கொள்ளாது என அறிவிப்பு. 

 
நீட் தேர்வு விலக்கு வேண்டும் என கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து அதனை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும். ஆனால் சில மாதங்களாக நீட் தேர்வு மசோதா ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் இருந்தது. 
 
இந்நிலையில் தற்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.  
 
இதனிடையே நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி கலந்து கொள்ளாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
மேலும், நாளை நடைபெற உள்ள உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரை சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.