தொடர்புடைய செய்திகள்
- காங்கிரசில் சசி தரூருக்கு வாக்களித்தவர்கள் விரைவில் கட்சி மாறுவார்கள்: முதல்வர் தகவல்
- பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!
- விஜய் டிவியின் பிரபல சீரியலில் ஜி பி முத்து… வைரல் ஆகும் புகைப்படம்!
- கோப்பையை வென்ற விளையாட்டு வீரருக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக மாவட்ட தலைவர்
- மாநில வேந்தரை நியமிக்கும் சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்! தமிழக அமைச்சர் வரவேற்பு
நாளை 1100 இடங்களிலும் பாஜக ஆர்ப்பாட்டம் – ஏன்?
நாளை பால் விலை உயர்வை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஆவினின் ப்ரீமியம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துவதாக ஆவின் அறிவித்தது. இதனால் ஆவின் ஆரஞ்சு நிற ப்ரீமியம் கொழுப்புசத்து நிறைந்த பால் பாக்கெட் ஒரு லிட்டரின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.46க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அட்டைதாரர்களாக இல்லாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பால் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 15 ஆம் தேதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று முன்னதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. நாளை 1100 இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited By: Sugapriya Prakash
