1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (12:02 IST)

வங்கி அதிகாரிகளை அழைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்: செந்தில் பாலாஜி வீட்டில் பரபரப்பு..!

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை அவருடைய வீட்டிற்கு அழைத்துள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த சில மணி நேரங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் உடனடியாக செந்தில் பாலாஜி வீட்டுக்கு அழைக்கப்பட்டனர். 
 
இதனை அடுத்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு சென்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்திய மத்திய ராணுவ துணைப்படை வீரர்கள் பாதுகாப்பில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran