1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (21:30 IST)

கரூரில் தக்ஷின் நர்சரி பிரைமரி பள்ளி கல்வி குழுமங்களின் மழலைகளின் விழிப்புணர்வு ! மனிதச் சங்கிலி

கருவூர் தெற்குத் தெருவில் உள்ள தக்ஷின் நர்சரி பிரைமரி குழந்தைகள் ராகவேந்திரர் கோயில் அருகில் சீருடையுடன் அணிவகுத்து நின்று பாதுகாப்பாய் வெடி வெடிப்போம், பறவைகளுக்கு பாதிப்பின்றி வெடி வெடிப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்போம்! போன்ற விழிப்புணர்வு அட்டைகளுடன் முழக்கங்களை எழுப்பி விழிப்புணர்வு கூட்டினர் .
இதனைத்தொடர்ந்து வேலு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மனித நேயத்தை வெளிப்படுத்தினர். 
 
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் பி.லட்சுமி, கல்வி குழுமங்களின் தாளாளர் மீனா சுப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆசிரியைகளும் பங்கேற்றனர். 
 
சிறப்பு அழைப்பாளராக கருவூர் திருக்குறள் பேரவை செயலாளரும், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற மேலை.பழநியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.