வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (10:19 IST)

அரக்கோணம் முன்னாள் எம் பி ஏ எம் வேலு கொரோனா தொற்றால் பலி!

அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்பியும் தமாகவின் மாநில துணைத் தலைவருமான ஏ எம் வேலு நேற்று காலமானார்.

கடந்தவாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏ எம் வேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் சோளிங்கரில் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

ஏ எம் வேலு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைப் பொது தலைவராக பதவியில் இருந்தவர். மேலும் அரக்கோணம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.