மீண்டும் இ-பாஸில் திருமணம் ஆப்ஷன் நீக்கம்! – குழப்பத்தில் மக்கள்!

செவ்வாய், 18 மே 2021 (10:51 IST)
தமிழக இ-பாஸ் ஆன்லைன் தளத்தில் திருமணம் என்ற வசதி சேர்க்கப்பட்ட நிலையில் மீண்டும் நீக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் அவசியம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் தளத்தில் விண்ணப்பிப்பதற்கு திருமண காரியங்களுக்கு செல்வது என்ற வசதி நேற்று நீக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த விளக்கத்தில் திருமணம் என்ற ஆப்ஷனை பலர் தவறாக பயன்படுத்துவதாகவும், அதிகளவில் திருமணம் என்ற வசதியை பயன்படுத்தி இ-பாஸ் பெறுவதாலும் இந்த வசதி நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் திருமணம் என்ற ஆப்ஷன் இ-பாஸ் விண்ணப்ப தளத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. மருத்துவம், முதியவர்களை பேணுதல், இறப்பு தொடர்பான காரியங்களுக்கு மட்டுமே இ-பாஸ் தளத்தில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்