1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (16:06 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி : அதிமுக எம்பி சி.வி. சண்முகம் பேட்டி

shunmugam
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக அதிமுக எம்பி சிவி சண்முகம் டெல்லியில் இன்று பேட்டி அளித்துள்ளார்.
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அதிமுக, திமுக உட்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது என்றும் வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சென்று அதிமுக நிர்வாகிகள் சரிபார்த்ததாகவும் அதிமுக சரிபார்த்த வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையத்துடன் வழங்கி உள்ளோம் என்றும் அதிமுக எம்பி சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
 
 முறைகேடாக ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமார் 40,000 வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran