வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 5 மே 2016 (18:38 IST)

அதிமுக தேர்தல் அறிக்கை: செல்போன், மடிகணினி, மின்சாரம் இலவசம்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். இதன் முதல் பிரதியை தம்பிதுரை பெற்றார். இதில் பல இலவச அறிவிப்புகளையும், அதிரடி கவர்ச்சியான திட்டங்களையும் அறிவித்துள்ளனர்.


 
 
தேர்தல் அறிக்கையின் முக்கிய தகவல்கள்:-
 
* மகளிருக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஆட்டோக்கள் வாங்க மானியம் வழங்கப்படும்.
 
* லோக் ஆயுக்தா அமைக்கப்படும்.
 
* முல்லைப்பெரியார் அனையின் நீர்மட்டம் 152அடியாக உயர்த்தப்படும்.
 
* தாதுமணல் விற்பனையை அரசே ஏற்கும்.
 
* தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் இனி காலை சிற்றுண்டியும் வழங்கப்படும்.
 
* மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும்.
 
* வழக்கறிஞர் சேமநல நிதி 7 லட்சமாக உயர்த்தப்படும்.
 
* தாலிக்கு தங்கம் இனி 4 கிராமிலிருந்து ஒரு சவரனாக வழங்கப்படும்.
 
* குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் இலவச செல்போன்.
 
* புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்.
 
* கேபிள்டிவி செட்டாப் பாக்ஸ் இலவசம்
 
* மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி வழங்கப்படும்.
 
* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
 
* மகப்பேறு உதவித்தொகை ரூ. 18,000 ஆக உயர்த்தப்படும்.
 
* குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
 
* பொங்கல் திருநாளுக்கு கோ-ஆப்டெக்ஸில் துணி வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்படும்.
 
* 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணமில்லை.
 
* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* 2016-2021 காலக்கட்டங்களில் 40000கோடி வரை பயிர்கடன்கள் வழங்கப்படும்.
 
* அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும்.
 
* தமிழ்நாட்டில் சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம்.
 
* விவசாயிகளின் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்.
 
* சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு எளிமையாக்கப்படும்.
 
* மீனவர் நிவாரண தொகை ரூ.5000-ஆக உயர்த்தப்படும்.
 
* மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம்.
 
* காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 
* மகப்பேறு உதவிதொகை ரூ.18000-ஆக உயர்த்தப்படும்.
 
* உள்நாட்டின் மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்
 
* மின்பதன பூங்காக்கள் அமைக்க தொடரந்து நடவடிக்கை எடுக்கப்படும்
 
* புதிய சாலைகள் அமைக்கப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
 
* பள்ளிக்கல்வி மேம்படுத்தப்படும்
 
* ஏழை, எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்காக அம்மா பேங்கிங் கார்டு.
 
* சிறுவர், சிறுமியருக்கு வைட்டமின் சி மாத்திரை.