ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (12:06 IST)

ஓபிஎஸ் உடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு உறுதி!

ops eps
எடப்பாடி பழனிச்சாமி உடன் சமரசத்திற்கு தயார் என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் கூறிய நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்புடன் சமரசம் பேச தயார் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கின் விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சமரசத்துக்கும் தயார் என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர்
 
 
ஆனால் ஓபிஎஸ் தரப்புடன் சமரசம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எடப்பாடிபழனிசாமி வழக்கறிஞர் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுளது.
 
 இதனை அடுத்து தற்போது மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறித்து விசாரணை முடிவில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது