சென்னை-புதுச்சேரி ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
"சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இருமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்:16115/16116), கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.