1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (16:45 IST)

கொட நாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க தனிப்படை அமைப்பு!

kodanadu
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடு போன தாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஏற்கனவே பலரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொட நாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை சிபிசிஐடி எஸ்பி சி.எஸ் மாதவன் தலைமையில் இது அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை விசாரிக்க ஏடிஎஸ்பி முருகவேல் அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் இணைந்து, 10 காவல் அதிகாரிகளாக   நியமிக்கப்பட்டுள்ளனர்

Edited by Sinoj