1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2020 (10:43 IST)

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் மீதும் குண்டர் சட்டம்: காவல்துறை ஆணையர் உத்தரவு

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் மீதும் குண்டர் சட்டம்
கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த கறுப்பர் கூட்டம் யூடியூப் நிர்வாகி சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்ற செய்தியை நேற்று பார்த்தோம். கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது ஏற்கனவே ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது குண்டர் சட்டத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இந்த வழக்கு பரபரப்பான கட்டத்தை அடைந்தது.
 
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்ட நிலையில் இன்று கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கறுப்பர் கூட்டம் யுடுயூப் நிர்வாகி செந்தில்வாசன் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.