1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (11:01 IST)

9 மாவட்டங்களில் ஓரிருமணி நேரத்தில் மழைக்கு வாயுப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் 9 மாவட்டங்களில் ஓரிருமணி நேரத்தில் மழைக்கு வாயுப்பு. 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
 
அதோடு நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் 9 மாவட்டங்களில் ஓரிருமணி நேரத்தில் மழைக்கு வாயுப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
அதன்படி நீலகிரி, ஈரோடு, தேனி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.