1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 12 பிப்ரவரி 2015 (17:24 IST)

சென்னை விமான நிலையத்தில் எட்டரை கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரேநாளில் எட்டரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இன்று காலை மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த அப்துல் நிசாம் என்ற பயணி தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் சுங்கத்துறை பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் ஆய்வு செய்தனர்.

 
அப்போது, 4 கிலோ தங்க பிஸ்கட்டுகள் கடத்திக்கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல, சவுதியில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவரிடமிருந்து அரை கிலோ தங்கம் பிடிபட்டது.
 
இந்நிலையில் மஸ்கட்டில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பயணியிடம் இருந்து 4 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.
 
அந்த பயணி, தான் கொண்டு வந்திருந்த பெரிய சூட்கேஸில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. பிடிபட்ட தங்கத்தின் மதிப்புகள் இரண்டரை கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.