தொடர்புடைய செய்திகள்
- 2024ம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்: கால அவகாசம் நீட்டிப்பு!
- நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை.. கடைசி தேதி என்ன?
- கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50-ஆவது ஆண்டு பொன்விழா - தமிழக ஆளுநா் ஆா். என். ரவி பங்கேற்பு
- சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு..! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
- தலைமை பூசாரி பதவிக்கு பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு..!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர்.. எப்போது விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் மார்ச் 28ம் முதல் ஏப்ரல் 29 வரை உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணி காலியாக இருக்கும் நிலையில் அந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்த நிலையில் தற்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த பணிக்கு பலர் ஆர்வத்துடன் விண்ணப்பிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,. மார்ச் 28ஆம் தேதி முதல் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ஒரு மாத காலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இருப்பதால் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 4000 உதவி பேராசிரியர் பணிகள் காலியாக இருப்பதை அடுத்து ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva
