வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (12:47 IST)

3 வயது குழந்தையை பலாத்காரம் செய்து சாக்கடைக்குள் வீசிய கொடூரன்

புதுடெல்லியில் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து சாக்கடைக்குள் வீசியவரை காவலர்கள் கைது செய்தனர்.


 

வடக்கு புதுடெல்லியின் சராய் ரோகிலா பகுதியில் 3 வயது சிறுமி மாலை 7 மணி அளவில் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பீகாரை சேர்ந்த பால்பீர் [வயது 35] என்பவர் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி, தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், அந்த சிறுமியை அப்பகுதி இரயில் நிலையத்தில் உள்ள சாக்கடையில் வீசியுள்ளார். இதற்கிடையில், குழந்தையை காணவில்லை என்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அவரது பெற்றோர்கள் தேடி அலைந்துள்ளனர். எங்கும் தேடி கிடைக்காதால் பெற்றோர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், அந்த சிறுமியின் சகோதரி ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் உள்ளார். இந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி, பால்பீர் பெயரை தொடர்ந்து 9 மணி நேரமாக தண்ணீர் கூட குடிக்காமல் சொல்லி வந்துள்ளார். ஆனால், அவர் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதையடுத்து, குழந்தையின் வீடு அருகே காவலர்கள் விசாரணை மேற்கொண்ட போது, மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி மீண்டும் பால்பீர் பெயரை கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவலர்கள் பால்பீர் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்

5 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், பால்பீர் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து இரயில் நிலையத்தில் உள்ள சாக்கடையில் வீசியதை கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், குழந்தையை சாக்கடையில் தேடிய போது, குழந்தைக்கு உயிர் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலாத்காரம் செய்த பால்பீரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.