1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (11:14 IST)

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!

ஹோட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட மாநில தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான நிலையில் நேற்று அதே நாமக்கல் பகுதியில் பர்கர் சாப்பிட்ட ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ’
 
இந்த நிலையில் கிருஷ்ணகிரி ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களுக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டதை அடுத்து 26 வடமாநில தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஹோட்டல்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva