1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 11 நவம்பர் 2021 (09:12 IST)

கனமழை எதிரொலி: 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இன்று 20 மாவட்ட பள்ளிகளுக்கு சில மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. 
 
இது இன்று மாலை சென்னை அருகே கரயை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் இன்று 20 மாவட்ட பள்ளிகளுக்கு சில மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கபடுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.