செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (10:40 IST)

செம்மரம் வெட்ட சென்றதாக 20 தமிழர்கள் திருப்பதியில் கைது

திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்றதாக சந்தேகத்தின் பெயரில் 20 தமிழர்களை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். 
ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கென்று தனிப்பிரிவு காவல் படையும் அமைத்துள்ளனர்.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 20 தமிழர்களை செம்மரம் வெட்ட சென்றதாக சந்தேகத்தின் பெயரில் அவர்களை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து ஆந்திர போலீஸார் கைது செய்யப்பட்ட தமிழர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.