1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (11:24 IST)

இன்னும் சில மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை!

அடுத்த சில மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் இன்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் அடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.