வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2015 (13:18 IST)

காதல் (கவிதை)

காதலனும் காதலியும் கைகளைக் கோர்த்தபடி நடந்து சென்றபோது கவிதைகளால் பேசிக்கொண்டனர்.

காதலன்: காலையில் முகம் காட்டும்
                   கதிரவன் ஒளிபட்டு
                   மின்னும் தளிர்போல
                   நீ
                   ஜொலிக்கிறாய்...
 
காதலி:   நன்பகல் வேளையிலே
                 சாலையில் போகயிலே
                 ஒளிரும் தார்போல
                 உனை கண்டேன் நான்...
 
                 காதலில் இணைந்தோர்க்கு
                 நிறமென்ன குறையென்ன
                 வாழ்வோம் ஒன்றாக அதைத் தாண்டியே...!