1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...!!

ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.
ஹெர்ஸ்பெரிடின் என்ற ஆரஞ்சில் உள்ள பொருளானது இதயத்தில் அடைப்பு உண்டாகாமல் தடுக்கிறது. இதனால் நெஞ்சு வலி வராமல் தடுக்கலாம். ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
 
ஆரஞ்சில் உள்ள ப்ளோவினோய்டு காயங்களையும் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்யும். உடலில் ஏதேனும் காயங்கள்  ஏற்பட்டால் அதை விரைவில் குணமாக்கும்.
 
இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அல்சரினால் குடலில் ஏற்படும் பாதிப்பை தடுத்து செரிமான மண்டலத்தை சரி செய்கிறது. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் சிறுநீரக  கற்களை கரைத்து விடும்.
 
புற்றுநோயை சரி செய்வதுடன் ஆரோக்கியமான சருமத்தை தரும். மேலும் முதுமையான சருமத்தை விரட்டி இளமையான சருமத்தை பெறலாம். அதிக அளவிலான உள்ள நார்ச் சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
 
இரும்பு சத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு வைட்டமின் சி தேவை. ஆரஞ்சில் இது அதிகமாகவே உள்ளது. இதனால் இரத்த  சோகையை சரிசெய்ய முடியும்.
 
ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமிருப்பதால், இப்பழங்களை சாப்பிட்டு வரும்போது உடலில் கால்சியம் சேர்மானத்தை அளவுடன்  வைக்க உதவுகிறது.