1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (15:04 IST)

விஷ்ணு கிராந்தி மூலிகை எந்த நோய்களுக்கு மருந்தாகிறது தெரியுமா...?

Vishnukranti
விஷ்ணுகிராந்தியை மூலிகையை வேரோடு எடுத்து தினமும் நெல்லிக்காய் அளவு எடுத்து, பாலில் அரைத்து சாப்பிட்டால் மறந்து போன நினைவுகள் திரும்பவும் வரும்.


விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு நோய் குணமாகும்.

விஷ்ணு கிராந்தி இலையை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியாகும். சீதபேதி குணமாக விஷ்ணு கிராந்தி வேர், இலை, தண்டு, பூ என அனைத்தையும் அரைத்துக் பாக்கு அளவு தயிரில் கொடுக்க குணமாகும்.

விஷ்ணு கிராந்தி இலையை சுண்டைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியாகும். சீதபேதி குணமாக விஷ்ணு கிராந்தி வேர், இலை, தண்டு, பூ என அனைத்தையும் அரைத்துக் பாக்கு அளவு தயிரில் கொடுக்க குணமாகும்.

விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உடல் சூடு, காய்ச்சல், முதலியவை குணமாகும்.

டெங்கு காய்ச்சல் குணமாக சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு,  பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உடல் சூடு, காய்ச்சல், முதலியவை குணமாகும்.