வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக்கும் பசலைக் கீரை ஜூஸ்!

மனித உடலுக்கு போதுமான இயக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. அப்பொழுது தான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமான இருக்கும். இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் ஆகியவை மனித உடலில் மிக முக்கிய உறுப்புகள். இந்த  உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

 
 
உதாரணத்திற்கு, மூளையில் ஏற்படும் சிறிய அடைப்பு மனித உடலில் வாதத்தை ஏற்படுத்தி உடலின் ஒட்டு மொத்த  இயக்கத்தையும் நிறுத்திவிடும் அல்லது மூளையை செயலிழக்க செய்துவிடும். அதேபோல் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில்  சிறிது குறைந்தாலும் இதய நோய்கள் அல்லது மாரடைப்பு ஏற்படும். எனவே, இது போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளை  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உடல் இயக்கமும் முக்கியம்.
 
எப்படியிருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமன், மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றால் இரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது கொழுப்பு போன்றவை சேர்ந்து இதயத்திற்கு  செல்லும் இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, இரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை இயற்கையான  முறையில் போக்குவதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியமுறை  மிகவும் உதவிகரமாக இருக்கும்.
 
தேவையானப் பொருட்கள்:
 
பசலைக் கீரை ஜூஸ் – 1/2 டம்ளர்
வறுத்த ஆளி விதை – 1 டேபிள் ஸ்பூன்.
 
ஜூஸ் செய்முறை:
 
ஒரு டம்ளர் பசலைக் கீரையுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதை சேர்க்க வேண்டும். நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த  ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குறைந்தது 2 மாதத்திற்கு குடிக்கவேண்டும்.
 
கொழுப்பை கரைக்கும்:
 
இந்த ஜூஸை தினமும் குடித்து வரும் போது இயற்கையான முறையில் இதய இரத்தக் குழாயிகளை சுத்தம் செய்து, இதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இந்த ஜூஸை குடிக்கும் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு சத்து  நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும், தினமும் உடற்பயிற்சி  செய்வது உடல் பருமன் அதிகரிக்காமல் தடுத்து உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.