1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய் பாதிப்பை தவிர்க்கும் கோடைக்கேற்ற உணவு வகைகளை பற்றி அறிவோம்...!

காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு  நல்லது. கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான  நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.

 
 
வெள்ளரி: வியர்வையின் மூலம் உடம்பிலிருந்து அதிகமாகத் தண்ணீர் வெளியேறும்போது உடம்பில் தாது உப்புகளின் சமநிலையைக் காக்க வெள்ளரி உதவுகிறது. வெள்ளரியின் தோலில் அதிகமாக "ஸ்டீரால்" உள்ளது. இந்த "ஸ்டீரால்" கொழுப்பைக் கட்டுப்படுத்தக் கூடியது. எனவே வெள்ளரியைக் கழுவிவிட்டு தோலைச் சீவாமலே சாப்பிடலாம். காரணம்  தோலில்தான் அதிக மாக "ஸ்டீரால்" உள்ளது.
 
தக்காளி: அதிக தண்ணீர்ச் சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான தக்காளி, புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளுக்குத் தடை போடக்கூடியது. தக்காளிக்கு அதன் தனிச்சிறப்பான சிவப்பு நிறத்தைத் தரும் "லைக்கோபீன்" என்ற வேதிப்பொருள், வெயில் காலத்தில் நமது சருமம் வெயிலால் பாதிக்கப்படாமல் காக்கிறது. தக்காளியில் "வைட்டமின் ஏ" சத்தும்  அதிகமாக உள்ளது.
 
தர்ப்பூசணி: தண்ணீர்ச் சத்து நிறைந்த, கலோரி குறைந்த தர்ப்பூசணி, வெயில் காலத்தைச் சமாளிக்க ஏற்ற ஒன்று. தர்ப்பூசணி  சக்தி வாய்ந்த "ஆன்டி ஆக்சிடன்ட்களை" கொண்டுள்ளது. உடம்பில் நச்சுக்களின் தீமையை எதிர்க்கக் கூடியவை இவை. தர்ப்பூசணி நார்ச்சத்தும் செறிந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
 
ஸ்ட்ராபெர்ரி: "வைட்டமின் சி" சத்து மிக்கது. அதிகமான சூரிய ஒளியால் ஏற்படும் தோல் பாதிப்புகளை இது சரிப்படுத்தக்கூடியது. இவை தவிர ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மற்ற ஒரு வேதிப்பொருள் "பிளேவனாய்டு" புற்றுநோய்க்கு  எதிரானது. 
 
வெங்காயம்: வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள "குவர்சடின்" என்று வேதிப்பொருள் அதற்கு உதவுகிறது.