1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (16:40 IST)

சிறுகண்பீளை மூலிகையின் அற்புத மருத்துவ குணங்கள் !!

சிறுகண்பீளை இலையை இடித்து சாறுபிழிந்து 30 மில்லி அளவு குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு கல்லடைப்பு, பெரும்பாடு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.


சிறுகண்பீளை வேர் பட்டையில் பனை வெல்லம் சேர்த்து விழுது போல் அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தாலும் மேற்கண்ட நோய் குணமாகும்.

சிறுகண்பீளையுடன் சிறு நெருஞ்சில், மாவிலங்கை வேர், பேராமுட்டிவேர் இவற்றை சம அளவு சேர்த்து குடிநீர் செய்து குடித்து வர சிறுநீரகத்தில் உள்ள கல்லைக் கரைத்து வெளியேற்றும்.

சிறுகண்பீளை வேரை கஞ்சியில் சேர்த்துக் காய்ச்சி குடித்து வர கர்ப்பிணிப் பெண்களுக்கு வலுவைத் தரும்.

சிறுகண்பீளை பொடி செய்து 1/2 முதல் ஒரு கிராம் அளவு பாலில் கலந்து குடித்து வர ரத்தத்தைப் பெருக்கும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.

சிறுகண்பீளை வேர், சங்குப்பூ வேர், மூக்கிரட்டை வேர், வெட்டி வேர், விலாமிச்சை வேர், வில்வ வேர், முட்கா வேளை வேர் இவற்றை சம அளவு எடுத்து கஷாயமாக்கிக் கொள்ளவும். அதில், ஒரு சிட்டிகை அளவு குங்கிலிய பொடி தூவி உட்கொள்ளக் கொடுக்க நீரடைப்பு, நீர்க்கட்டி பிரச்சினைகள் தீரும்.

சிறுகண்பீளை செடியை சமூலமாக (செடியின் அனைத்து பாகமும்) எடுத்து நீர் விட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து வடிகட்டி குடித்துவர சிறுநீரகம் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

சிறுகண்பீளை இலை 44 கிராம் எடுத்து வெண்ணெய் போல நன்கு அரைத்து நீர் கலக்காத எருமை: மோரில் கலந்து குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும்.

சிறுகண்பீளை, சிறுகீரை வேர், நெருஞ்சில் இவற்றை சம அளவு எடுத்து இடித்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி உட்கொண்டு வந்தால் கல்லடைப்பு பிரச்சினை தீரும்.