தொடர்புடைய செய்திகள்
- வெளிநாட்டு பயணம் ஓவர்.. தொடங்கியது உள்நாட்டு பயணம்.. பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயணம்..!
- காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்! - கன்னியாகுமரியில் ஜூன் 22-இல் நடைபெறுகிறது
- 8 டம்ளர் தண்ணீர் போதுமா? உடலுக்கு எவ்வளவு நீர் தேவை?
- சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?
- பாலூட்டும் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!
யோகா பயிற்சிக்கான சரியான நேரம் மற்றும் வழிமுறைகள்!
யோகா பயிற்சி செய்யும்போது உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், வெளியின் வெப்பநிலை அதிகமாக இருக்கும் நேரங்களில், அதாவது பகல் வேளைகளில், யோகா செய்வதை தவிர்க்க வேண்டும்.
யோகா செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் அதிகாலை, காலை அல்லது மாலை பொழுதுகள் ஆகும். குறிப்பாக, காலை 8.30 மணிக்குள் மற்றும் மாலை 4.30 மணிக்கு மேல் யோகா பயிற்சி செய்வது சிறந்தது. மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், சூரியன் உதிக்கும் வேளையிலும், சூரியன் மறையும் வேளையிலும் யோகா பயிற்சி செய்தால் அதன் பலனை முழுமையாகப் பெறலாம்.
யோகா பயிற்சி செய்யும்போது, காற்றோட்டமான இடம் அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசனங்களை செய்யும்போது வாயைத் திறந்து வைத்திருக்கக் கூடாது. காற்றை மூக்கு வழியாகவே உள்ளிழுத்து, மூக்கு வழியாகவே வெளியே விட வேண்டும். இதுவே யோகாவின் சரியான சுவாசம் ஆகும். இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், யோகாவின் முழுப் பலன்களையும் பெற முடியும்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
