மும்பை தாஜ் விடுதி அருகே 16 துப்பாக்கிக் குண்டுகள் கண்டெடுப்பு!
மும்பையில் மிகவும் பிரபலாமான தாஜ் ஓட்டல் அருகே 16 துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்படுள்ளன.
தாஜ் ஓட்டலின் அருகே உள்ள கார் நிறுத்தப்பகுதியில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிகுண்டுகள் 2- 3 வருடங்களுக்கும் முன்னால் அந்த இடத்தில் மறைத்து வைக்கபட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, 26/11 தாக்குதலின் போது தீவிரவாதிகள் தாஜ் ஓட்டலை குறிவைத்து தாக்குதல் நடத்தினர் அதில் கிட்டதட்டழ் 31 பேர் பலியாயினர். பலியானவர்களில்பெரும்பாலானோர் வெளிநாட்டினர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.