1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 19 மே 2014 (10:57 IST)

தேர்தலில் தோற்கடித்தது ஏன்? மக்களிடம் விளக்கம் கேட்கும் ஒமர் அப்துல்லா

மக்களவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியை தோற்கடித்தது ஏன்? என்று விளக்கம் அளிக்குமாறு ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களை அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இதுதொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன்.
 
மக்களின் கருத்துகளையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
 
மேலும், தனது இ-மெயில் முகவரியையும் வெளியிட்டுள்ள ஒமர் அப்துல்லா, அந்த முகவரிக்கு தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியை தோற்கடித்தது ஏன்? என்பதற்கான காரணத்தை அனுப்பி வைக்கும்படியும் ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.